search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணூர் துறைமுகம்"

    26CNI0240402024: சீன கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றி கொண்டு சமீபத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. இந்த நிலையில் அந்த கப்பலில் வந்த காங்-யுவு (57) என்ற மாலுமி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சீன கப்பல் கடந்த 6-ந் தே

    பொன்னேரி:

    சீன கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றி கொண்டு சமீபத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது.

    இந்த நிலையில் அந்த கப்பலில் வந்த காங்-யுவு (57) என்ற மாலுமி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சீன கப்பல் கடந்த 6-ந் தேதி இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்த இருந்த போதே அவர் காணவில்லை என்று இந்தோனேசியா துறைமுகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் மாலுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதா? உடல்நல குறைவால் உயிரிழந்தாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது.
    • கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உள்ள அதானி பெர்த்தில் கண்டெய்னர் லாரியை டிரைவர் குமரேசன் என்பவர் இன்று அதிகாலை ஓட்டி சென்றார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, துறைமுக உள்பகுதி கடலில் கவிழ்ந்து தலைக்குப்புற விழுந்தது. உடனடியாக அங்கிருந்த துறைமுக பணியாளர்கள், டிரைவர் குமரேசனை மீட்டனர். காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் இன்னும் மீட்கப்படவில்லை.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்று இருப்பது ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரிய வந்தது.
    • கண்டெய்னர் கதவின் சீலை உடைக்காமல் அதில் உள்ள கதவின் நட்டுகளை கழற்றி 495 டயர்களை திருடி இருப்பது தெரிய வந்தது.

    பொன்னேரி:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து 1500 டயர்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு சென்றது. இந்த டயர்கள் அனைத்தும் பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

    பிரேசில் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் கண்டெய்னர் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் ரூ.8.29 லட்சம் மதிப்பு உள்ள 495 டயர்கள் திருடப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக பிரேசில் நாட்டில் உள்ள நிறுவனம் சென்னையில் உள்ள நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் டில்லி பாபு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்று இருப்பது ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரிய வந்தது. மேலும் கண்டெய்னர் கதவின் சீலை உடைக்காமல் அதில் உள்ள கதவின் நட்டுகளை கழற்றி நூதன முறையில் 495 டயர்களை திருடி இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக மணலி சன்னதி தெருவை சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணி (29), திருவொற்றியூரைச் சேர்ந்த இளமாறன் என்கிற அப்புன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவான 4 பேரை போலீசர் தேடி வருகிறார்கள்.

    • பிரேசில் நாட்டு கம்பெனி ஒரகடத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனிக்கு புகார் தெரிவித்தது.
    • முதல் விசாரணையில் மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்றதாக ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரியவந்துள்ளது.

    பொன்னேரி:

    சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தனியார் கம்பெனி டயர் கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு மீஞ்சூர் அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் பிரேசில் நாட்டுக்கு 1500 டயர் ஏற்றுமதி செய்ய கடந்த 2-ம் மாதம் 9-ந் தேதி அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் பிரேசில் நாட்டில் ஆர்டர் கொடுத்த கம்பெனி நிறுவனம் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் 1005 டயர்கள் மட்டும் இருப்பது தெரியவந்தது. மீதமுள்ள 495 டயர்கள் காணாமல் இருப்பது குறித்து பிரேசில் நாட்டு கம்பெனி ஒரகடத்தில் உள்ள தனியார் டயர் கம்பெனிக்கு புகார் தெரிவித்தது.

    அதன் அடிப்படையில் தனியார் டயர் கம்பெனி தலைமை அதிகாரி நாராயணன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டு மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து முதல் விசாரணையில் மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் டயர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி 13 மணி நேரம் நின்றதாகவும் ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரியவந்துள்ளது. மேலும் கண்டெய்னர் கதவு சீல் உடைக்காமல் கதவின் போல்ட் மட்டும் கழற்றி 495 டயர்களை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு 8.29 லட்சம் ஆகும். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×